திருச்செங்கோடு கட்டளை ஆதிசைவர்
திருச்செங்கோட்டு குருத்துவமாக முதல் மண்டபக்கட்டளை அருணகிரி அய்யம்பாளையம் இமகமுடி சிற்றம்பல நாயனார் மடத்தார் என்ற கொங்க கிராமிய ஆதிசைவரில் பாரத்வாஜ கோத்திரத்தார் இருந்து வந்தனர். பின்னர் குலசேகர சோழன் (ராஜராஜன்), குலோத்துங்கன் ஆகியோர் சோழ தேசத்து அலகு ஆதிசைவரைத் திருச்செங்கோடு ஸ்தானிகத்திற்குக் குடியேற்றினான் என்று கொங்கு மண்டல சதகம் கூறுகிறது. இன்றும் இவ்விரு வகையினரே அர்ச்சகர்களாக உள்ளனர். ஆதிசைவர்கள் 55. குலசே கரன்குலோத் துங்கசீர்ச் சோழர்கள் கொங்கிடைமெய்த் தலபூசை நன்குறத் தன்னாட் டுளாரிற் சமர்த்தரகண்டு நிலையான காணியு மேன்மையு மீய நிதானமுறு வலவாதி சைவர்கள் வாழ்வதன் றோகொங்கு மண்டலமே. விளக்கவுரை - குலசேகர சோழன் , குலோத்துங்க சோழன் ஆகிய சக்கிரவர்த்திகள் கொங்கு நாட்டின் ஆதிக்கம் பெற்றுள்ள காலத்தில் , அந்நாட்டிற் சிறந்த தலங்களில் ஆலய பூஜை ஆக மோக்தமாக நடத்தக் கருதித் தன்னாட்டுள்ள வல்லவர்களை அழைத்து காணி பூமியும் பெருமையும் கொடுக்கப் பெற்றவர்களான ஆதிசைவர்கள் விளங்கு...
Comments
Post a Comment